×

கோயில்களில் பக்தர்களுக்கும், கடவுளுக்கும் இடையில் இடைத்தரகர்களுக்கு இடமில்லை: சென்னை உயர்நீதிமன்றம் கருத்து

சென்னை: கோயில்களில் பக்தர்களுக்கும் தெய்வத்துக்கும் இடையில் இடைத்தரகர்களுக்கு இடமில்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் 2ம் பிரகாரத்தில் பக்தர்கள் பிரதட்சணம் செய்ய ஏற்பாடு செய்யக்கோரி ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு, நீதிபதிகள் மகாதேவன் மற்றும் ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இரண்டாம் பிரகாரத்தில் பக்தர்கள் வலம் வர மேற்கொள்ளப்பட்ட ஏற்பாடுகள் குறித்து நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு ஆகியோர் இரு வாரங்களுக்கு முன் நேரில் ஆய்வு செய்தனர். இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, கோயிலுக்கு வரும் பக்தர்களை பேருந்து நிலையத்தில் வைத்து தரிசனத்திற்கு ஏற்பாடு செய்து தருவதாக கூறி 500 ரூபாய் வரை இடைத்தரகர்களால் வசூலிக்கப்படுவதாக மனுதாரர் குற்றம்சாட்டினார். இதை கேட்ட நீதிபதிகள் கடவுளுக்கும், பக்தர்களுக்கும் இடையில் இடைத்தரகர்களுக்கு இடமில்லை எனவும் இதை அனுமதிக்க முடியாது எனவும் தெரிவித்தனர். ஆண்டவன் முன்பு அனைவரும் சமம் என கருத்து தெரிவித்த நீதிபதிகள், இதுசம்பந்தமாக மனுவாக தாக்கல் செய்ய மனுதாரர் தரப்புக்கு அறிவுறுத்தி  விசாரணையை 12 வாரங்களுக்கு தள்ளிவைத்தனர். இதேபோல், இந்த விவகாரம் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய அரசு தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வி.ஐ.பி. தரிசனத்தை முறைப்படுத்துவது குறித்து அந்த அறிக்கையில் விளக்கமளிக்க உத்தரவிட்டனர்….

The post கோயில்களில் பக்தர்களுக்கும், கடவுளுக்கும் இடையில் இடைத்தரகர்களுக்கு இடமில்லை: சென்னை உயர்நீதிமன்றம் கருத்து appeared first on Dinakaran.

Tags : Chennai High Court ,Chennai ,Trichy Srinangam Ranganadar Temple ,
× RELATED பெண் வழக்கறிஞர் மீது பதிவு...